தேனுக னாவி செகுத்து பனங்கனி
தானெறிந் திட்ட தடம்பெருந் தோளினால்
வானவர் கோன்விட வந்த மழைதடுத்து
ஆனிரை காத்தானால் இன்று முற்றும் அவையுய்யக் கொண்டானால் இன்று முற்றும்.
பதவுரை
தேனுகன் |
– |
தேநுகாஸுரனுடைய |
ஆவி |
– |
உயிரை |
செகுத்து |
– |
முடிக்க நினைத்த அத்தேனுகனை |
பனங்கனி |
– |
(ஆஸிராலிஷ்டமான) பனைமரத்தின் பழங்கள் (உதிரும்படியாக) |
எறிந்திட்ட |
– |
(அந்த மரத்தின் மேல்) வீசியெறிந்த |
தடப்பெரு தோலினால் |
– |
மிகவும் பெரிய தோலாலே, (கோவர்த்தன பர்வதத்தை எடுத்து) |
வானவர் கோன் விடவந்தமழை தடுத்து |
– |
தேவேந்திரனது ஏவுதலாலே வந்த வர்ஷத்தைத் தவிர்த்து |
ஆன் நிரை |
– |
பசுக்களின் திரளை |
காத்தானால் |
– |
ரக்ஷித்தருளின கண்ணபிரானால் |
இன்று முற்றும் |
||
அவை |
– |
அப்பசுக்கூட்டத்தை |
இன்று முற்றும் |
விளக்க உரை
***- தேநுகன்-கழுதை வடிவங்கொண்டு கண்ணனை நலிய வந்த அசுரன்; இவ்வரலாற்றை “வானவர் தாம் மகிழ” (1-5-4) என்ற பாட்டின் உரையிற் காண்க. செகுத்து-செகுக்க; எச்சத்திரிபு. பனை+கனி, பனங்கனி; “பனை முன் வலிவரின் ஐ போயமும்” என்ற சிறப்பு விதி காண்க. தான் -அசை. ‘ஆனிரை காத்தானால்’ என்பதனால் அநிஷ்ட நிவர்த்தனமும், ‘அவை உய்யக்கொண்டானால்’ என்பதனால் இஷ்ட ப்ராபனமும் சொல்லப்படுகின்றது; அதாவது- வந்து ஆபத்தை அகற்றி, வயிறு நிரம்பப் புல்லுந்தண்ணீருங் கொடுக்கை.
Source: http://dravidaveda.org