பெரிய திருமொழி முதற்பத்து முதல் திருமொழி
கலைகள் |
– |
சாஸ்த்ரங்களை |
கற்றிலேன் |
– |
கற்றறிந்தவனல்லேன்; |
ஐம்புலன் கருதும் கருத்துள் |
– |
பஞ்சேந்திரியங்கள் விரும்புகின்ற விஷயங்களிலே |
மனதைத் திருத்தினேன் |
– |
நெஞ்சைச் செலுத்திக் கிடந்தேன்; |
அதனால் |
– |
இப்படியிருந்ததனாலே |
பேதையேன் |
– |
அவிவேகியான நான் |
நன்மை பெற்றிலேன் |
– |
ஒரு நன்மையும் பெறாதவனாயினேன்; |
பெரு நிலத்து ஆர் |
– |
பெரிய இப்பூமியிலேயுள்ள |
உயிர்க்கு எல்லாம் |
– |
பிராணிகளுக்கு எல்லாம் |
செற்றமே வேண்டி |
– |
தீங்கு செய்வதையே புருஷார்த்தமாகக்கொண்டு |
திரிதருவேன் |
– |
(அதுவே போதுபோக்காகத்)திரிந்து கொண்டிருந்தேன், |
(இப்படி நெடுங்காலம் கெட்டுப் போனேனாகிலும், இன்று பகவத் கடாக்ஷத்தாலே)- |
||
தவிர்ந்தேன் |
– |
இக்கொடுமைகளெல்லாம் தவிரப்பெற்றேன்; |
அடியேன் |
– |
தாஸனாகப் பெற்ற நான் |
செல்கதிக்கு உய்யும் ஆறு எண்ணி |
– |
செல்ல வேண்டிய நல்வழியை நண்ணி உஜ்ஜீவிக்கும்படியைச் சிந்தித்து |
நாராயணா என்னும் நாமம் |
– |
நாராயணா நாமத்தை |
நல் துணை ஆக பற்றினேன் |
– |
நல்ல ஸஹாயமாகக் கைக்கொண்டேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை
ஓர் ஆசிரியன் திருவடிகளிலே சென்று பணிந்து குணிந்து கேட்டவனல்லேனாகயாலே ஒரு சாஸ்த்திர ஞானமும் எனக்கில்லை; நெஞ்சை ஒரு நொடிபொழுதாகிலும் நல்விஷயத்திலே செளுத்தினவனல்லேன் செவி வாய் கண் மூக்கு உடலேன்னுமைம்புலன்ன்கள் விரும்புகின்ற சப்தாதி விஷயங்களிலே நெஞ்சைச் செலுத்திப் போந்தவனாதலால் அறிவுக் கேடனாய் ஹிதசிந்தை பண்ணப்பெற்றிலேன்; எனக்கொரு நன்மை சம்பாதியாதவளவேயன்றி உலகத்திலுள்ள பிராணிகளையெல்லாம் எல்லாம் ஹிம்சித்து நான் வயிறு வளர்க்கும் வழியையே நோக்கினேன். இப்படி நான் இருந்தது நேற்று வரையில்; இன்று இந்நிலைமைகள் எல்லாம் தவிர்ந்து நல்வீடு சேர்ந்து உஜ்ஜீவிக்க வேண்டிய வழியை சிந்தித்து, இக்கரையில் நின்றும் அக்கரையிலே கொண்டு தள்ள வல்லதொரு திருநாமத்தைத் துணையாகப் பற்றினேன்.
English Translation
I had no schooling, I let my senses rule and to lead my heart everywhere. I lost a good life, O File-to-me wretch; I roamed like death on all creatures. I put an end to my roaming everywhere seeking a life of redemption. I found the perfect Mantra for comfort, Narayana is the good name!
Source: