மையார் கடலும் மணிவரையும் மா முகிலும்
கொய்யார் குவளையும் காயாவும் போன்று இருண்ட
மெய்யானை மெய்யமலையானைச் சங்கேந்தும்
கையானை கைதொழாக் கையல்லகண்டாமே – திருமங்கையாழ்வார்
பதவுரை
மையார் கடலும் | கருங்கடலையும் |
மணிவரையும் | நீலமணிமயமான மலையையும் |
மா முகிலும் | காளமேகத்தையும் |
கொய் ஆர் குவளையும் | பறிக்கவேணுமென்று விரும்பத்தக்க நீலோற்பலத்தையும் |
காயாவும் | காயாம்பூவையும் |
போன்று | ஒத்து |
இருண்ட | கறுத்த |
மெய்யானை | திருமேனியையுடையவனும் |
மெய்ய மலையானை | திருமெய்யமலையில்கோயில் கொண்டிருப்பவனும் |
சங்கு ஏந்தும் கையானை | திருச்சங்கை ஏந்திக்கொண்டிருக்கின்ற திருக்கையையுடையனுமான பெருமானை |
தொழா | அஞ்சலி பண்ணாத |
கை | கைகளானவை |
கை அல்ல | கைகளேயல்ல |
கண்டாம் | (இதனை நாம் நன்கு) அறிவோம். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை
விளக்க உரை***- ஸர்சேச்வரனைத் தொழாத கைகள் கையல்ல, உலக்கையே என்றதாயிற்று. கைதொழாக் கையல்ல-தொழாக்கை கையல்ல என்று அந்வயிப்பது. கையல்ல, உலக்கையே.
English Translation
The Lord has a dark hue like the deep ocean, the gem mountain, the laden cloud, the blue lotus and the kaya flower. He bears a conch in his hand, and resides in Tirumeyyam. Those who do not fold their hands in worship hae no hands, We know it.
source: