On 15th April, 2016 Durmuki Varusha Chithirai 2nd, (Pushyam) ; is the day 3 0f Sri Bakthavatsala Perumal Chitrai Brahmotsavam at Thirukannamangai. In the morning Sri Bhakthavatsala perumal with andal thiruveedhi purappadu in Pallaku to the Nearby village Ammaiappan. Later perumal Thirumanjanam took place at Sri KRISHNAN temple at Ammayappan and returned at 9.30 PM. Later in the night 11PM Perumal Thiruveedhi purappadu took place in Sesha Vahanam. Lot of Bhaagavathas from nearby villages had darshan of Divyadampatis
எங்களுக்கு அருள் செய்கின்ற ஈசனை*
வாசவார் குழலாள் மலைமங்கை தன்-
பங்கனை* பங்கில் வைத்து உகந்தான் தன்னை*
பான்மையைப் பனிமா மதியம் தவழ்*
மங்குலைச் சுடரை வடமாமலை-
உச்சியை* நச்சி நாம் வணங்கப்படும்-
கங்குலை* பகலைச் சென்று நாடிக்*
கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ கிருஷ்ண மங்கள க்ஷேத்ரமான திருக்கண்ணமங்கையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு நடந்து வரும் சித்திரை ப்ரும்மோத்ஸவத்தில், இன்று சித்திரை மாதம் 2 ந் தேதி 15.04.2016 வெள்ளிக்கிழமை காலை வழக்கம்போல் விஸ்வரூபம், திருவனந்தல், காலசந்தி பூஜைகள் முடிந்து, வீதியில் “ செல்வர் “ ஏளி பலி சாதித்து அதன் பின் “ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் ஸ்ரீ ஆண்டாளுடன்” திருப்பல்லக்கில் 2 வது நாளாக 2 கி.மீ தொலைவில் உள்ள “ அம்மையப்பன் “ கிராமத்திற்கு எழுந்தருளி, அங்குள்ள நேற்று விட்டுப்போன பாக்கி வீதிகளில் மண்டப்ப்படி ஆகி அங்குள்ள ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலுக்கு எழுந்தருளி ஸேவை சாதித்து, பின் திருமஞ்சனம் கண்டருளி இரவு 9.30 மணிக்கு திருக்கண்ணமங்கை எழுந்தருளினார்.
Courtesy: Sri Rajagopalan TSR