On October 04, 2014, 747th Thirunakshathra Mahothsavam of Swami Desikan took place at Thirukkannamangai Divya Desam, Day 10 utsavam was celebrated well . Vishesha Visthaara thirumanjanam was performed for Swami Desikan and Sri Hayagrivar in the morning. The water was taken from Kaveri which is 2 Km away from the temple. Different Prasadam are made Amuthupadi for Perumal on Swami Desikan Thirunakshatram. Veda parayanam and with Nalayira Divya Prabhanda parayanam took place in a very magnificent manner. Lot of Bhaagavathaas took part in Swami Nigamantha Mahadesikan Thirunakshatram at Thirukkannamangai.
விஜய வருஷம் புரட்டாசி திருவோண நன்நாளில் காலை 7 மணி சுமாருக்கு 2 மைல் தொலைவில் உள்ள காவிரியின் கிளை நதியான “வெட்டாற்றில்” இருந்து புனித நீர் சுமார் 33 கடங்களில், 33 ஸ்வாமிகளால் எடுத்து குடை தீவட்டி, மேள வாத்ய கோஷ்டியுடன் திருவீதி முழுவதும் வலம் வந்து சந்நிதி முன் எழுந்தருளப் பண்ணி ஸ்தபனம் செய்யப்பட்டது.
ஸ்வாமிகளுக்கு சிறிது நேர ஓய்வுக்குப் பின் ததியாராதனை 10 மணிக்கு முடிந்து, சுமார் 11 மணிக்கு ஸ்ரீ ஹயக்ரீவன், ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகனுக்கு வெளி மண்டபத்தில் விஸ்தார திருமஞ்சனம் மதியம் 1.30 வரை விசேஷமாக நடந்தது. உடன் ஸ்ரீ ஹயக்ரீவரை சந்நிதி உள் எழுந்தருளப் ப்ண்ணிவிட்டு, ஸ்ரீ தேசிகனுக்கு “கங்கையினும் புனிதமான தர்ஸ புஷ்கரிணி”யில் அபவிருதம்(தீர்த்தவாரி) ஆகி, உடனே விசேஷ அலங்காரம் செய்விக்கப்பட்டு ஸ்ரீ பாஷ்யகாரர், ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள், ஸ்ரீ அபிஷேக வல்லித் தாயார் சந்ந்திகளுக்கு புறப்பாடு ஆகி, ஸ்ரீ பாஷ்யகாரர், ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள், ஸ்ரீ அபிஷேக வல்லித் தாயார் சந்நிதிகளில் மங்களா சாசனம் ஆனது.
பின் ஸ்ரீ ஹயக்ரீவர் மங்களாசாசனம் நடந்தது. அதன் பின் சுமார் 5.30 மணியளவில் திருப்பாவை சாற்றுமுறை நடந்தது.
அன்று சரஸ்வதி பூஜை ஆனதால், தாயார் புறப்பாடு, நவராத்ரி கொலு முடிந்து, சரஸ்வதி அம்மன் திருமஞ்சனம் ஆகி. ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள் விசேஷ புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு சுமார் 11.00 மணிக்கு ஸ்ரீ தேசிகன் ஸந்நிதிக்கு எழுந்தருளுவதற்கான புறப்பாடு ஆனது. விசேஷ ப்ரம்மாண்ட வெடி, வாண வேடிக்கை, விசேஷ நாதஸ்வரக் கச்சேரியுடன் உள் ப்ரகாரத்தில் ஸ்ரீ பக்தவத்ஸலன் எழுந்தருளி ஸ்ரீ ஆண்டாள் சந்நிதி அருகில் எழுந்தருளியவுடன், ஸ்ரீ தேசிகன் வேத கோஷத்துடன், பஞ்சாயி பூர்ண கும்பம் சமர்ப்பிக்கப்பட்டு, பட்டு, பரிவட்டம், மாலை இத்யாதிகளுடன் எதிர்கொண்டழைத்து பெருமாள் ஸ்ரீ தேசிகன் சந்நிதியை நோக்கி திரும்பி ஏளியவுடன், பட்டு பரிவட்டங்கள் சாற்றி ஆரத்தி ஆனதும், தஸாவதார ஸ்லோகம் 13ம் ஒவ்வொரு ஸ்லோகமாக சேவிக்கப்பட்டு, ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் ஒவ்வொரு தளிகை, அதாவது சுமார் 25 KG சுக்கு ஏலம் கலந்த நாட்டுச் சர்க்கரை, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, சாராபருப்பு, முந்திரி, உலர் திராக்ஷை, பேரீச்சை, டைமன் கல்கண்டு, குண்டு சீனா கல்கண்டு, குழவு ஜீனி, தேங்காய் பூ, கொப்பரை தேங்காய் பல், அக்ரூட் பருப்பு, அத்திப் பழம், dirty fruity, முதலிய பதார்த்தங்கள் ஒவ்வொன்றாக நைவேத்யம், கற்பூரம், காளாஞ்சி செய்விக்கப்பட்டு, பின் அனைத்து த்ரவியங்களையும் ஒன்றாக கலந்து சேவிக்க வந்திருக்கும் அனைத்து சேவார்த்திகளுக்கும் சந்தனம், காளாஞ்சியுடன் இந்த ப்ரசாதம் விநியோகிக்கப்பட்டது.