Thiruadhyayana Utsavam is scheduled to take place at Sri Bhakthavatsala Perumal Temple, Thirukannamangai from Januaray 1 to 10, 2013. Everyday during Pagal Pathu, there will be Thirumanjanam, Sevakalam, Sattrumurai in the morning and Purappadu in the evening. Here is the detail schedule of the events during Thiruadhyayana utsavam.
எதிர்வரும் 01.01.2014 முதல் 10.01.2014 வரை பகல் பத்து உத்ஸவமும் 11.01.2014 முதல் 20.01.2014 வரை இராப்பத்து உத்ஸவமும் விமரிசையாக நடக்க உள்ளது.பகல் பத்து உத்ஸவத்தில் தினசரி காலை திருமஞ்சனம், சேவாகாலம் சாற்றுமுறையும், மாலை 5 மணிக்கு உள் ப்ரகாரம் எனப்படும் இரண்டாவது ப்ரகாரத்தில் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் புறப்பாடு நடைபெறும்.9ம் உத்ஸவத்தன்று “பெரியாண்டான்” சிறப்பு எனப்படும் மூலவர் திருவடி திருமஞ்சனமும் திருமங்கையாழ்வார் திருவடி தொழுதலும் நடைபெறும்.
10.01.2014 அன்று ” மோஹினி அலங்காரப் புறப்பாடு” நடைபெறும். 11.01.2014 அதிகாலை 5 மணிக்கு “(வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு)சொர்க்க வாசல்” திறப்பு நடைபெறும். சொர்க்க வாசல் திறந்து பெருமாள் “செண்பகப் ப்ரகாரம்” எனப்படும் 3 வது ப்ரகாரத்தில் பெருமாள் எழுந்தருளுவார். 12.01.2014 – 20.01.2014 வரை தினசரி இரவு 7 மணிக்கு பெருமாள் ” சொர்க்க வாசல் ” வழியாக 3வது ப்ரகாரத்தில் புறப்பாடாகி எழுந்தருளுவார். 20.01.2014 இராப்பத்து சாற்றுமுறை அன்று நம்மாழ்வார் திருவடி தொழுதல் நடந்து சாற்றுமுறை ஆனதும் பெருமாள் உள் ப்ரகாரத்தி ஏளி “சொர்க்கவாசல்” சாத்துதல் நிகழ்ச்சி நடைபெற்று உத்ஸவம் பூர்த்தி ஆகும்.