Due to the shortage of water in Srirangam, its becoming extremely difficult to fetch water from the rivers for nithya thiruaaradhanam. On the 2nd of June 2013, recitation of Thiruchandavirutham and Thirupavai is organized to pray for rain in Srirangam, details of which can be read below
ஸ்ரீரங்கத்தில் கடுமையான வெயிலினால் வறட்சி ஏற்பட்டு இரண்டாறுகளும் முற்றிலும் வற்றிவிட்ட நிலைதான் நிலவுகிறது. இதனால் நித்யம் ஸ்ரீரங்கநாதனுக்கு வடதிருக்காவிரியில் இருந்து எடுக்கப்படும் திருமஞ்சனம் சில காலமாக எடுக்க இயலாமல் போனது.
அரங்கன் திருமுற்றத்து அடியார்களும் தண்ணீர் பற்றாக்குறையினால் அவதிப்படுகின்றனர். இதை முன்னிட்டு இப்பவும் நாளது 02/06/2013, ஞாயிற்றுக்கிழமை அன்று ஸ்ரீரங்கத்தில் மழை பொழிய வேண்டி, காஞ்சி ஸ்ரீ பேரருளாளன் ஸந்நிதியிலுள்ள ஸ்வாமி ஸ்ரீநம்மாழ்வார் திருவடிகளில் ப்ரார்த்தித்து கீழை கோபுர வாயிலினருகில் உள்ள உடையவர் திருமாளிகையில், ஸ்ரீரங்கம் ஸ்வாமி ஸ்ரீதேசிகன் திருமாளிகையில் இயங்கி வரும் அதிதி ஸத்காரத்தின் சார்பாக திருச்சந்த விருத்தம் மற்றும் திருப்பாவை பாராயணம் (பத்து ஆவ்ருத்திகள்) நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பாராயணம் ஸ்ரீ.உ.வே. பாஷ்யம் ஐயங்கார் ஸ்வாமி (காஞ்சி நம்மாழ்வார் ஸந்நிதி அர்ச்சகர் மற்றும் ப்ரபந்த வித்வான்) தலைமையில் நடைபெறுகிறது. இதைக் கண்ணுறும் ஸ்ரீவைஷ்ணவ பாகவதாள் அனைவரும் அரங்க நகரில் மழை வேண்டி பகவானிடம் ப்ரார்த்தனை செய்து கொள்ளுமாறும் திருப்பாவை, ஸுதர்ஸனாஷ்டகம், திருச்சந்த விருத்தம் முதலியவற்றே யதாசக்தி யதாவகாசம் பாராயணம் செய்யுமாறு ப்ரார்த்திக்கிறோம்.
குறிப்பு: ஸ்ரீரங்கம் ஸ்வாமி ஸ்ரீதேசிகன் திருமாளிகையில் மழை வேண்டி ஸுதர்ஸன ஹோமம் செய்யப்படவுள்ளது (தேதி பின்னர் அறிவிக்கப்படும்)