Sri U.Ve. Gopala Thathayarya Mahadesikan (Villiambakkam Swami) ThirunakshatrAm on January 18, 2012

0
1,438 views

Today January 18, 2012 (Thai, Visakam) is the Thirunakshatram of Edur Emmadi Koti Kannikadanam Sri U.Ve. Gopala Thathayarya Mahadesikan most popularly known as “Villiambakkam Swami”

கோபாலதாத தேசிகன் (வில்லியம்பாக்கம் ஸ்வாமி)

இந்த ஸ்வாமி ஏடூர் எம்மடி லக்ஷ்மீ குமார கோடி கந்யகாதானம் லக்ஷ்மீ குமார தாத தேசிகன் திருவம்சத்தில் திருப்புட்குழி எம்பெருமான் கைங்கர்ய பரம்பரையில் ஸ்ரீநிவாஸதாத தேசிகனுக்கு குமாரராக, வில்லியம்பாக்கம் என்கிற அக்ரஹாரத்தில் திருமலை நல்லான் சக்ரவர்த்தி ஸ்ரீ ஸ்வாமி (மாதமஹன்) திருமாளிகையில் ஆனந்த ஸம்வத்ஸரம் தை மாதம் விசாக நக்ஷத்திரத்தில் அவதரித்தார்.

இந்த ஸ்வாமிக்கு வில்லியம்பாக்கம் ஸ்வாமி என்று ப்ரஸித்த வ்யவஹாரம். ஏழாவது திருநக்ஷத்திரத்தில் பிதாவினிடத்தில் ப்ரம்ஹோபதேசம். பெருமாள் கோயிலில் ஸ்ரீரங்கராஜ வீதியில் க்ருஹ நிர்மாணம் பண்ணிக் கொண்டு பத்து திருநக்ஷத்திரத்திலேயே ஏள்ளி நித்யவாஸம் செய்தருளினார். ஸ்ரீமதுபயவே ஸ்ரீமத் கிருஷ்ணதாத தேசிகனிடம் பஞ்சஸம்ஸ்காரம் பண்ணிக்கொண்டு ஸாமான்ய சாஸ்திரமும் உபய வேதாந்த காலக்ஷேபமும் செய்தருளினார். ஸ்ரீரங்கராஜ வீதியில் உள்ள திருப்புட்குழி ஸ்வாமி ஆச்ரமத்தில் உள்ள ஸ்ரீதேசிகன் ஸந்நிதியில் அனேக சிஷ்ய வர்க்கங்களுக்கு உபய வேதாந்த ப்ரவசநம் செய்துகொண்டும் பஞ்சகால பராயணராய் ப்ரதி தினமும் காலையில் பேரருளாளன் பெருந்தேவித் தாயாருக்கு மங்களாசாஸன காலத்தில் பால் அமுது செய்வித்துக் கொண்டும், விரக்தாக்ரேஸரராய் ஆசார்யாபிமதமான பேரருளாளன் திருவடிகளையே தாரக போஷக போக்யங்களாக அத்யவஸித்து நித்யவாஸம் செய்தருளினார். இந்த ஸ்வாமி ஸாதித்த கிரந்தங்கள்:

உபாகர்ம தர்பணம், ஸங்கரம த்வாதசீ நிர்ணயம், ஸங்க்ராந்தீ நிர்ணயம், மித்யாதீத ப்ராயஸ்சித்த நிர்ணயம், புத்ர ஜனனாசௌச ப்ராபல்ய விதி, உபராகே கர்தவ்ய விதி முதலியன.

Note: Villiyambakkam (Sarngapuram) is a village close to Kanchipuram. It was established by Srimad Raghavarya Mahadesikan 500 years ago. This village is well-known for great acharyas,and anushtathas. The perumal temple is Sri Alarmelmanga Sametha Srinivas Perumal. Mangalasasanam was performed by Sri Kethandapatti Swami, Sri Denganikottai Swami, Sri Kozhialam Swami, Sri Thirupukuzhi Swami, Sri Navalpakkam Swami, Sri Iyya Swami, Sri Chetlur Swami and Sri Villiambakkam Swami.

Write up in tamil by Sri Raghuveer Dayal from Thiruppullani

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here