On the 7th of September 2013, by the niyamanam of Parakala mutt, the “Ramanuja Dayapathram thaniyan” utsavam was celebrated grandly at Melkote (Thirunarayanapuram). The utsavam marks the celebration of the thanian bestowed by Brahmatantra Swatantra Jeeyar on Swami Desikan. The Thirunakshatra Mahotsavam of the HH 44th Azhagiyasingar of Sri Ahobila Mutt (Mukkur Srimath Azhagiyasingar) was also conducted in the morning. Vidwad Sadas was conducted with the participation of many eminent scholars. The following events were conducted as a part of Mahotsavam celebrations.
- Morning celebration- Thirunakshatra Mahotsavam of Mukkur Srimath Azhagiyasingar in Ahobila Mutt
- Afternoon-02.00 to 05.00 pm Vidwad Sadas including the participation of eminent Scholars
- Evening around 05.30 pm- Perumal and SriBhashyakarar purappadu to Adivan Satagopa Swami Brindavan
- 06.30 pm-The celebration of Ramanuja Dayapathra Utsavam: Perumal and SriBhashyakarar purappadu to Desikan Sannidhi
For last year’s utsavam coverage, please visit http://anudinam.org/2012/08/24/ramanuja-dayapathram-mahotsavam-melkote/
Some of the photos taken during the utsavam this year can be viewed below.
தாஸஸ்ய விண்ணப்பம்.
“ஹஸ்தஃ ஸுஹஸ்தஃ.” ஹஸ்தநக்ஷத்ரம் ஒரு நன்னாள், இன்று (ஆவணிஹஸதம்) அவதரித்த “ராமானுஜதயாபாத்ரம்” தனியன் ஒரு மஹோன்னதமான தனியன். அதை கொண்டாடும் மஹோத்ஸவம் மிக மிக நல்லதாக உன்னதமாய் அமைந்தது நமக்கு ஆநந்தத்தை அளித்தது. வேதத்தில் “ஹஸ்தப்ரயச்சத்வம்ருதம் வஸீயஃ தக்ஷிணேன ப்ரதிக்ருப்ணீம ஏநத்”, ஹஸ்த நக்ஷத்ரம் நாசமில்லாத உயர்ந்தபணத்தை அளிக்கட்டும். அதை நாம் வலது கையால் ஸ்வீகரிப்போம் என ஓதப்பட்டது. பணத்தின் ஸ்தானத்தில் நமக்கு கிடைத்தது உயர்ந்ததான ப்ரஹ்மாநந்தமாகும்,ஸுகமாகும். அதை தாஸன் அனுபவித்தவிதம் பலரும் அனுபவித்து ஆநந்திக்கும்படி விண்ணப்பிக்கிறேன்.
நமது ஸம்ப்ரதாயத்தில் ப்ரதானமான இரு ஆசார்யர்களுக்கும் (எம்பெருமானார் ஸ்வாமி தேசிகன்)விபவத்தில் ச்ரமங்கள் ஏற்பட்டகாலத்தில் இருவருக்கும் ஆச்ரயம் கொடுத்த இடம் திருநாராயணபுரமாகும்.(ஸ்வாமிதேசிகன் இதிலும் ஸ்ரீபாஷ்யகாரரின் பந்தாவை– வழியை பின்பற்றியவர் என்பது விசேஷம்.) இவர்களை ஸம்ரக்ஷித்து ஸம்ப்ரதாயத்தை காப்பாற்றியவர் திருநாரணன்.இதை அநுஸரித்தே ஸ்வாமி தேசிகன் திவ்யதேச மங்களாசாஸநச்லோகத்தில் இந்த ஸ்தானத்தில் இவரிடம் ப்ரார்த்திப்பது,
“நவநவபஹுபோகாம் நாத நாராயண த்வம்
விரசய துரிதௌகைஸ்தாம் அநாக்ராதகந்தாம். ”
இந்த யாதவாத்ரிக்கு பாபிகளின் வாஸனையில்லாமல் ஸம்ருத்தியை இருக்கச்செய்வாயாக. (“தே த்வகம் புஞ்ஜதே பாபாஃ” என்பதைப்போல் இங்கு துரிதம் என்பதால் பாபிகள் எனலாம், அவர்களின் கூட்டத்தின் வாஸநை போலும் இல்லாமல் செய்வாயாக என) இதனால் மற்றதிவ்யதேசங்களில் விரோதிகளின் உபத்ரவமிருந்தது ஸ்பஷ்டம். (விமதபக்ஷாம், கலிதோஷாம், ரிபுஜந)
இந்த ப்ரார்த்தனையை ஏற்றே செல்வப்பிள்ளை இம்மஹோத்ஸவத்தை நடத்திக்கொள்கிறார் என்றால் மிகையில்லை.
உபயநாச்சிமாருடன் எம்பெருமான், எம்பெருமானாருடன் திருவீதி உத்ஸவம் கண்டருளும் ஸமயம் மழைபெய்தபடியால் வீதியில் நடைபெறும் அதிகாரஸங்க்ரஹகோஷ்டீ ஸ்ரீதேசிகன் ஸந்நிதியில் ஸ்ரீதேசிகனின் சேர்த்தியிலேயே நடைபெற்றது. பிறகு அரையர் ஸேவையுடன் அர்கயபாத்யாதி உபசார ஸமர்பணம் நடைபெற்று, நக்ஷத்ரஹாரத்தி, கடதீபம் ஸமர்ப்பித்து திருவாய்மொழியில் பத்தாம் பத்து, இராமானுசநூற்றந்தாதி, ப்ரபந்தசாரம், பிள்ளை அந்தாதிகளின் ஸேவாகாலம். பிறகு அநேகவிதமான பக்ஷ்யங்களையும், சித்ரான்னங்களையும் நிவேதநம் செய்து ஸேவை க்ரமத்தில் சாத்துமறை நடைபெற்றது. இங்கு ஓர் விசேஷம், திருவாறாயிரப்படியின் சாத்துமறையும் நடைபெற்றது. உபயவேதாந்தம் என்பது நமது ஸம்ப்ரதாயத்தில் மாத்ரம் ஆகும். ஆயினும் பல திருக்கோயில்களில் ஸ்ரீபாஷ்யத்தையோ, திருவாறாயிரப்படியையோ ஸேவிப்பது மிகவும் துர்லபம்.இங்கு இன்று திருவாறாயிரப்படியை ஸேவிப்பதில் காரணம் , முன்பு ஸ்வாமிதேசிகன், ஸ்ரீநயிநாராசார்யருக்கு இங்குதான் திருவாறாயிறப்படி காலக்ஷேபம் ஸாதித்து பூர்திசெய்தார். ஸ்ரீப்ரஹ்மதந்த்ரஸ்வதந்த்ரஸ்வாமி ராமானுஜதயாபாத்ரம் என்கிற தனியனை எழுதி ஸ்வாமி தேசிகன் ஸந்நிதியில் ஸமர்ப்பித்தார். அந்த தநியனை திருவாறாயிறப்படி காலக்ஷேபத்தில் அனுஸந்திக்க ஸ்வாமி நியமித்தார்.ஆக இங்கு ராமானுஜதயாபாத்ரம் என்கிற தனியன் அவதரித்தபடியால் இந்த உத்ஸவத்தை பகவத்விஷயசாத்துமறை தின உத்ஸவமாகவும் கொண்டாடி கடைசியில் அருளப்பாடிட்டு ராமானுஜதயாபாத்ரத்தை த்விவாரம் ஸேவித்து திருநாள் பாட்டுடன் உபஸம்ஹாரம் செய்து தீர்தப்ரஸாதவிநியோகத்துடன் அமைந்ததாகும்.
இப்படியிருக்க சிலர், ஸ்வாமிதேசிகனுக்கும், அவரடியார்களுக்கும் திவ்யப்ரபந்தத்தில் ஈடுபாடு குறைவு, வடமொழியான ஸம்ஸ்க்ருதவேதத்தில் மாத்ரம் பற்று உள்ளபடியால் அவர்கள் வடகலையார் என வழங்கப்படுகிறார்கள் என்ற அபத்த கதையை கட்டிவிட்டார்கள். இவ்வுத்ஸவத்தை ஸேவிப்பவர்களுக்கு,
“வாழி இராமானுசப்பிள்ளான் மாதகவால் வாழும் அணி நிகமாन्தகுரு, வாழி அவன் மாறன்மறையுமிராமானுசன் பாஷ்யமும் தேறும்படி உரைக்கும் சீர் “ என அனுஸந்திப்பது எத்தனை ஸத்யம் என்பது புலப்படும்.
ஸ்வாமி தேசிகன் ஸந்நிதியில் எம்பெருமான் மத்யமமாக எழுந்தருளியிருக்க, அவருக்கு வலதுபாகத்தில் எம்பெருமானார். இடது பாகத்தில் ஸ்வாமி தேசிகன். இம்மூவரின் சேர்த்தி மிகவும் அத்புதம். இதை ரஸித்து ஸேவிக்கும் ஸமயத்தில் அங்குள்ள ஸ்ரீஅரையர் ஸ்வாமி ஸாதித்தது மிகவும் ரஸனீயம்.
“சரணம் வ்ரஜ.அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுசஃ “ என கீதையை உபதேசித்த எம்பெருமான், அபயஹஸ்தத்துடன், “சரணம் வ்ரஜம்” என்பதை அனுஸரித்து அஞ்ஜலிஹஸ்தத்துடன் கீதாபாஷ்யத்தை அனுக்ரஹித்த எம்பெருமானார், கீதாபாஷ்யத்தின் வ்யாக்யானமாக தாத்பர்ய சந்திரிகையை அனுக்ரஹிப்பதாக ஸ்ரீகோசத்துடன் ஸ்வாமி தேசிகன் ஸேவை ஸாதிக்கிறார் என பெரியோர்கள் கூறுவர் என்றார். ஸ்வாமியிடம் எவ்விதம் பக்தி இருந்தால் இவ்விதம் அனுபவிக்கமுடியும் என நினைத்து அவர்களின் பக்தியை கண்டு வியந்தேன்.
இம்மாதிரி ஹஸ்தத்தில் காஞ்சியில் அவதரித்த நம்மத்திகிரித்திருமால் ஸ்ரீபாஷ்யகாரருடன் ஸ்ரீதூப்புலில் ஸ்வாமி தேசிகனுடன் ஸேவைஸாதிக்கும் நன்னாள் அனுஷ்டானகுள உத்ஸவமாகும். இந்த அனுபவத்தை பலவிதமாக முன்பே “கரிசைலக்ருஷ்ணமேகஃ காங்க்ஷிதவர்ஷீ” என விண்ணப்பித்துள்ளேன்.
திருப்பதியில் ஐப்பசி ச்ரவணத்தன்று ஸ்ரீகோவிந்தராஜன் ஸ்வாமிதேசிகன் ஸந்நிதிக்கு எழுந்தருளி சாத்துமறை உத்ஸவம் கண்டருள்கிறார். ஸ்வாமியின் ஸ்ரீஸூக்திகளை திருச்செவிஸாய்க்கவே திருச்சித்ரகூடத்தில் நின்றும் இங்கு எழுந்தருளினாரோ எனத்தோன்றும். மேலும் நாம் மித்யாதீதப்ராயச்சித்தார்தம் வருடத்தில் ச்ராவணத்துக்கு மறுநாள் காயத்ரீஜபத்தை அனுஷ்டிப்பதுபோல் மறுச்ரவணத்தன்று இவ்வுத்ஸவத்தில் மித்யாதீதப்ராயச்சித்தரூபமாக ராமானுஜதயாபாத்ரத்தை திருச்செவிஸாய்க்கிறார் எனலாம்.
இவ்விதம் திவ்யதேசம் தோறும் நடைபெறும் மஹோத்ஸவங்களை ஸேவித்தால் , “இங்கே திரிந்தேற்கு இழுக்குற்றென்” என்பதை ஸ்மரித்து “கண்டோம் கண்டோம் கண்ணுக்கினியன கண்டோம் தொண்டீர் எல்லீரும் வாரீர்” என்று கூவும்படி செய்யத்தோன்றும்.
“யே மே மதமிதம் நித்யமனுதிஷ்டந்தி மானவாஃ
ச்ரத்தாவந்தோநஸூயந்தோ முச்யந்தே தேபி கர்மபிஃ”
என கீதையில் ஸாதித்த ப்ரகாரம் பகவதபிமான இம்மஹோத்ஸவங்களை நடத்தி,சரணாகதியையும் அனுஷ்டிக்கும் அடியார்கள் எம்பெருமானுக்கு ஸந்நிஹிதராவர். அவர்கள் எல்லாபாபத்தில் நின்றும் விடுபட்டவர்களாகிறார்கள்அவர்களுக்கு ஸர்வ்விதமான க்ஷேமத்தையும் எம்பெருமான் அனுக்ரஹிப்பது திண்ணம்.
யே த்வேததப்யஸூயந்தோ நாநுதிஷ்டந்தி மே மதம்
ஸர்வக்ஞாநிவிமூடாந்ஸ்தாந் வித்தி நஷ்டாநசேதஸஃ
கீதாசார்யன்,பகவதபிமதத்தை த்வேஷிப்பவர்களுக்கு மூடர்கள் என அருளப்பாடிட்டார் என்பது அறியத்தகுந்ததாகும்.
न दैवं देशिकात्परम् न परं देशिकार्चनात्।
श्रीदेशिकप्रियः