On 21 September 2016, Durumukhi varusha Purattasi Krithikai, Pavithrotsavam concludes in grand manner at Sri Vadapathrasayee temple, Srivilliputhur. The Pavithrotsavam was conducted for seven days from 14 September 2016. The pavithrotsavam took place as per Sri Vaikhanasa agamam, Homam was conducted on all seven days both in the morning and evening. On the last day evening, Periyazhwar in Hamsa vahanam and Periyaperumal in Garuda Vahanam Thiruveedhi purappadu followed grand satrumurai . Lot of astikas took part in the pavithrotsavam and had the blessings of Azhwar and Divyadampatis…
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ வடபெருங்கோயிலுடையான் ஸன்னிதி பவித்ரோத்ஸவம்
ஏழு நாட்கள் நடைபெற்றது . இந்த மஹோத்ஸவம் ஸம்வத்ஸர ப்ராய:சித்தார்த்தமாக வெகு விமரிசையாக நடைபெற்றது.
பவித்ர மாலைகளுக்கு ஆகமரீதியாக ஹோமாதிகள், பூர்ணாஹுதி முடிந்து பவித்ர மாலையை மேளதாளம் வாத்ய விசேஷங்களுகளோடு சாத்துவதுதான் இம்மஹோத்ஸவத்தின் தாத்பர்யம். அனுதினமும் மாலை 3 மணியளவில் நவகலச திருமஞ்சனம் கண்டருளி, தொடர்ந்து சாயரக்க்ஷை திருவாராதனம் முடிந்து மந்த்ர புஷ்பம், தளிகை அமுது செய்தவுடன் அருளிச்செயல் கோஷ்டி திருவாய்மொழி சேவாகாலம், சாற்றுமுறையோடு தீர்த்த கோஷ்டியுடன் நிறைவுறும்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ வடபெருங்கோயிலுடையான் வார்ஷிக பவித்ரோத்ஸவம் நிறைவு நாள் மஹோத்ஸவம்,ஸம்வத்ஸர ப்ராயச்சித்தார்த்தமாக ஸப்த தின பவித்ரோத்ஸவம் வைகானஸ முறைப்படி அதிவிமரிசையாக நேற்று நிறைவுற்றது . 21 செப்டம்பர் மாலை 3 மணியளவில் நவகலச திருமஞ்சனம் கண்டருளி, தொடர்ந்து சாயரக்க்ஷை திருவாராதனம் முடிந்து மந்த்ர புஷ்பம், தளிகை அமுது செய்தவுடன் (தயிர்சாதம் திருப்பாவாடைத்தளிகையோடு) அருளிச்செயல் கோஷ்டி சாற்றுமுறை தீர்த்த கோஷ்டியுடன் மங்களகரமாக நிறைவுற்றது…
ஏழாம் மஹோத்ஸவம் பூர்த்தியன்று, இரவில் பெரியாழ்வார் ஹம்ஸ வாகனத்திலும், பெரியபெருமாள் கரூடாரூடராயும் திருவீதிகள் உலாவந்து சாற்றுமுறை திருவந்திக்காப்பு கண்டருளி கோஷ்டி விநியோகத்தோடு மங்களகரமாக நிறைவுற்றது…..
ஸ்ரீ பட்டநாத ஸூரீந்த்ர மாநஸாம்போஜ வாஸிநே !!!!!
ஸ்ரீமத் வடமஹாதாம ஸ்வாமிநே நித்ய மங்களம் !!!!!
These are some of the photos taken during the occasion…
Courtesy : Sri Mukundachariar Swami