The Mandalabisheka poorthi mahothsavam to Namperumaalai mItta Sri Suntharavaratha AnjanEyar was performed today (25.10.15) in a grand manner in Sri Ambujavalli nayika SamEtha Sri Athikesava perumal sannidhi, Soundaryapuram. Earlier Sri Suntharvaratha AnjanEyar had a special thirumanjanam, followed by recitation of panjasarga parayanam of Srimath Ramayanam and Swami Desikan’s Sri RaghuvIra gathyam. Sri AnjanEyar had a special alankaram of veNNai and vadai malai. Also carnatic music vidhwans like Kalaimaamani Sri Sambsivam(vINaa), kumuthavalli(vINaa) and Govindapuram Sri Bhuvarahan(Mruthangam) have played kIrthanams.
#சௌந்தர்யபுரம் #மண்டலாபிஷேகபூர்த்தி
வந்தவாசி காஞ்சிபுரம் சாலையில் அமைந்துள்ள சௌந்தர்யபுரம் ஸ்ரீக்ராமத்தில் எழுதருளியுள்ள ஸ்ரீ அம்புஜவல்லி நாயிகா ஸமேத ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் சந்நிதியில் சமீபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட நம்பெருமாளை மீட்ட ஸ்ரீ சுத்தரவரத ஆஞ்சனேயருக்கு நடைபெற்று வந்த மண்டலாபிஷேகத்தின் நிறைவு மஹோத்ஸவமான மண்டலாபிஷேக பூர்த்தி இன்று(25.10.2015) வெகு விமர்சையாக நடைபெற்றது. உத்சவத்தின் தொடக்கமாக ஆஞ்சனேயருக்கு விசேஷ திருமஞ்சனமும், அதைத் தொடர்ந்து ஸ்ரீமத் ராமாயணத்தின் பஞ்ச ரத்னங்கள் என்று போற்றப்படும் ஐந்து ஸர்க பாராயணமும், இறுதியாக ஸ்வாமி ஸ்ரீ வேதாந்த தேசிக அருளிச்செய்த ஸ்ரீ ரகுவீர கத்ய பாராயணமும் நடைபெற்றது. மேற்படி உத்சவத்தை முன்னிட்டு ஸ்ரீ சுந்தரவரத ஆஞ்சனேயருக்கு வெண்ணைக் காப்பு சாற்றப்பட்டிருந்தது. மேலும் கலைமாமணி ஸ்ரீ சாம்பசிவம் (வீணை), குமுதவல்லி (வீணை) மற்றும் கோவிந்தபுரம் ஸ்ரீ பூவராஹன்(மிருதங்கம்) ஆகியோரின் கச்சேரியும் நடைபெற்றது. திரளான ஆஸ்திகர்கள் இந்த உத்ஸவத்தில் கலந்து கொண்டு ஸ்ரீ சுந்தர்வரத ஆஞ்சனேயர் மற்றும் ஸ்ரீ அம்புஜவல்லி நாயிகா ஸமேத ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாளின் தரிசனத்தை கண்டு மகிழ்ந்தனர்.