On 13 April 2014, Vijaya varusha Panguni Uthiram, Thirukalyana Mahotsavam was Celebrated in grand manner at Sri Bhakthavatsala Perumal Temple, Thirukannamangai, In the morning Vishesha Thirumanjanam was performed for Sri Abhishekavalli Thayar and Bhakthavatsala Perumal.Later in the evening Thirukalyana Mahotsavam took place at thayar sannadhi in very grand manner. Lot of astikas took part in the utsavam and had the blessings of Divyadampatis.
நேற்று விஜய வருஷம் பங்குனி மாதம் 30 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை பங்குனி உத்ரத்தை முன்னிட்டு, திருக்கண்ணமங்கை ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு “திருக்கல்யாண ” மஹோத்ஸவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
அதையொட்டி ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் காலை 11 மணிக்கு புறப்பாடாகி ஸ்ரீ அபிஷேக வல்லித் தாயார் சன்னிதிக்கு எழுந்தருளி, அங்கு ஸ்ரீ அபிஷேக வல்லித்த்யார், ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் ஏக சிம்மாசனத்தில் எழுந்தருளி விசேஷ திருமஞ்சனம் கண்டருளினர்.
மாலை 6.30 மணிக்கு திருக்கல்யாண சீர் வரிசைகள் மேள தாளத்துடன் வலம் வந்து ஸ்ரீ அபிஷேக வல்லித்தாயார், ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் தாயார் ஸ்ன்னிதியிலிருந்து புறப்பாடாகி தாயார் சன்னிதி முன் மாலை மாற்றும் வைபவம் சிறப்பாக நடந்து, பின் ஊஞ்சல் ஆகி திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடந்து,
ஸ்ரீ அபிஷேக வல்லித்தாயார், ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் உள் ப்ரகாரத்தில் புறப்பாடாகி பத்தி உலா மண்டபத்தில் “பத்தி உலா” ஆகி திருக்கல்யாண உத்ஸ்வம் வெகு சிறப்பாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண மஹோத்ஸவத்தை கண்டு களித்து எல்லாம் வல்ல ஸ்ரீ அபிஷேக வல்லி நாயிகா ஸமேத ஸ்ரீ பக்தவத்ஸலனின் பேரரளுளைப் பெற்றனர்.
Writeup & Photography : Sri Rajagopalan TSR