ஸ்ரீ துர்முகி வருஷம் சித்திரை மாதம் 7ந் தேதி 20.04.2016 புதன்கிழமை காலை வழக்கம்போல் விஸ்வரூபம், திருவனந்தல், காலசந்தி பூஜைகள் முடிந்து, வீதியில் “ செல்வர் “ஏளி பலி சாதித்து அதன் பின் “ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள்” திருப்பல்லக்கில் “ வெண்ணெய்த் தாழி” சேவை வீதியுலா வந்து உள்ளே எழுந்தருளியதும் விசேஷ திருமஞ்சனம் கண்டருளினார்.
இரவு 9.30 மணிக்கு “ குதிரை” வாகனத்தில் ஆரோஹணித்து திருவீதி வலம் வந்து ஸ்ரீ தேவி, பூ தேவி, ஆண்டாள் சகிதம் திருப்பள்ளியறையில் சேவை சாதித்து அருளினார். ஏராளமான பக்தர்கள் சேவித்து இன்புற்றனர்.
வெஞ்சினக் களிற்றை விளங்காய் வீழக்*
கன்று வீசிய ஈசனை* பேய்மகள் –
துஞ்ச நஞ்சு சுவைத்துண்ட தோன்றலைத்*
தோன்றல் வாளரக்கன் கெடத் தோன்றிய-
நஞ்சினை* அமுதத்தினை நாதனை*
நச்சுவார் உச்சிமோல் நிற்கும் நம்பியை*
கஞ்சனைத் துஞ்ச வஞ்சித்த வஞ்சினைக்*
கண்ண மங்கையுள் கண்டுகொண்டேனே*
Morning – Vennai Thazhi Purappadu
Evening – Kudirai Vahanam
Courtesy: Sri Rajagopalan TSR