Yesterday,26 March 2014, Vijaya Panguni Sravanam ; Purappadu happens in grand manner at Sri Vilakoli Perumal Temple, Thiruthanka Divyadesam, Kanchipuram. As being Swami Desikan Masa Thirunakshatram, Thirumanjanam and purappadu happens at the avatara sthalam Thoopul. In the evening Perumal purappadu happens accompanying Swami Desikan. Deepaprakasa Perumal with his consorts gave a scintillating Sevai on Sathupadi. Swami Desikan had Perumal and Thayar Mariyathai during purappadu. Lot of astikas took part in the utsavam and had blessings of Divyadampatis.
These are some of the Photos taken during the Occasion…
Photography : Sri Vijayaraghavan MV
தாஸஸ்ய விக்ஞாபநம். இன்று ச்ரவண நக்ஷத்ரம், ஸ்வாமி தேசிகனின் மாத திருநக்ஷத்ரம், ப்ரதி மாதமாதம் ச்ரவணத்தன்று ஸ்வாமி தேசிகன் அபிகமனகாலத்தில் ஸ்ரீதேவாதிராஜனை மங்களாசாஸநம் செய்ய புறப்பாடுகண்டருளி ஸ்ரீதேவாதிராஜன் ஸந்நிதிவாசலில் இருந்தே நம்மத்திகிரித்திருமாலை ஸேவித்து ஸ்ரீதூப்புலில் மாத்யாஹ்நிக ஸ்நாநக்ரமத்தில் பெருமாளுடன் திருமஞ்ஜநம் கண்டருள்வார். பிறகு திருவாராதனமாகி தளிகை நிவேதனம் செய்து ஸ்வாமிக்கு மரியாதை சாத்துமறை ஸ்தோத்ரபாடகோஷ்டீ ப்ரஸாத விநியோகம் என நடைபெறும். இம்மாதமும் இந்தக்ரமத்தில் எல்லாம் நடைபெற்றது. இம்மாதத்தில் விசேஷம், இன்று ஸுதினம், ஸ்ரீஸ்வாமி விபவத்தில் மங்களாசாஸனம் செய்த ஸ்ரீசொன்னவண்ணம் செய்த பெருமாளின் உத்ஸவம் ,நான்காம் திருநாள், முன்பு கனிகண்ணன் ப்ரார்த்தனைக்கிணங்க பக்திசாரருடன் நாகம் பாய் சுருட்டி எழுந்தருளி பிறகு பக்தனின் ப்ரார்த்தனைப்டி திரும்பி எழுந்தருளி யதோக்தகாரீ என்பதான திருநாமத்தை பெற்றபடி சேஷவாஹத்தில் எம்பெருமான் திருவீதி உத்ஸவம் கண்டருள , ஸ்வாமி நம்மத்திகிரித்திருமாலை ஸேவிக்க எழுந்தருளும் காலத்தில் இவரும் எதிர்பட உபாயபலபாவேந என்று ஸாதித்தபடி உபாயமான இவருடைய மங்களாசாஸனமும் நடைபெற்றது. பிறகு திருமஞ்ஜநம் ஆனபிறகு உபயநாச்சமார்களின் பத்மத்துக்கு ஸ்வர்ணத்தில் கவசஸமர்பணம் ஸ்ரீமான் கந்தாடை மாமண்டூர் ஸ்ரீநிவாஸாசார்ய ஸ்வாமியின் உபயமாக நடைபெற்றது. ஸேவாகாலக்ரமத்தில் இன்று மூன்றாம் திருவந்தாதி, ஸ்ரீதேவாதிராஜனின் பல்லவ உத்ஸவம் சாத்துமறை தினம் ஸ்ரீஹஸ்திகிரமாஹாத்ம்யம் புராணபடனம் நடைபெறுவதால் ஸ்ரீதேசிகப்ரபந்தத்தில் மெய்விரத மான்மியம் ஸேவாகாலம், சாத்துமறை .ஸ்தோத்ரபாட கோஷ்டீயில் நான்கு எம்பெருமான்களின் ஸ்தோத்ரமும்—- ஸ்ரீவரதாஜபஞ்சாசத், வேகாஸேது ஸ்தோத்ரம், ஸ்ரீமதஷ்டபுஜாஷ்டகம், சரணாகதிதீபிகை, மற்றும் ப்ரார்த்தனாஷ்டகம் அனுஸந்திக்கப்பட்டது.
ஸசங்கசக்ரம் ஸகிரீடகுண்டலம் ஸபீதவஸ்த்ரம் ஸரஸீருஹேக்ஷணம்.
ஸஹாரவக்ஷஸ்தலசோபிகௌஸ்துபம் நமாமி விஷ்ணும் சிரஸா சதுர்புஜம் என்பதான த்யானச்லோகத்துக்கு அனுகுணமாக இன்று பெருமாள் ஸாதிப்பதை நேரில் ஸேவிக்காத அடியார்களும் சித்ரரூபத்தில் ஸேவிக்கும்படி ஸ்ரீமான் எம் வி, விஜயராகவன் ப்ரகாசனம் செய்துள்ளார். உபகரித்த அனைவருக்கும் மேன்மேலும் ச்ரேயஸ்ஸை நாம் அனுதினம் ப்ரார்த்திப்போமாக..
न दैवं देशिकात्परम् न परं देशिकार्चनात्।
श्रीदेशिकप्रियः
SrI:
The quality of coverage of the Utsavams by Anudinam grows day by day . Thanks are to the Team Members for their dedication and Bhagavad Bhakti.