On January 11,2014; Vijaya Varusha Margazhi Karthigai, Sarva Vaikunta Mukkodi Ekadasi, was celebrated in grand manner at Sri Prasanna Varadharaja Perumal Temple, Aminjikarai. Early Morning around 4.30 Nammazhwar Prostrate before Perumal infront of the Paramada Vasal. Later Perumal gave darshan in Kannadi Arai and started for Thiruveedhi Purappadu adjoining Nammazhwar. Lot of Sevarthis took part in the utsavam and had the blessings of Azhwar, Thayar and Perumal
அமைந்தகரை- ஸ்ரீ பிரசன்ன வரதராஜப்பெருமாள் திருக்கோயில்-வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில் (11.1.13) அதிகாலை 4.30 மணிக்கு பரமபத வாசல் வழியாக எம்பெருமான் எழுந்தருளினார். எதிரே ஸ்ரீ நம்மாழ்வார் பெருமாளைச்சேவித்தவாறு எழுந்தருளினார். பெருமளவிலான பக்தர்கள் திரண்டு இவ்வைபவத்தினைக்கண்டு ஆனந்தித்தனர். பின்பு கண்ணாடியறையில் எழுந்தருளி காட்சி தந்தார். காலை 8.00 மணிக்கு மேல் பெருமாள் ஆழ்வாருடன் திருவீதி புறப்பாடு கண்டருளினார். நாள் முழுதும் பல்வேறு இசை நிகழ்ச்சி கள் நடைபெற்றன.
இரவு இராப்பத்து உத்ஸவத்தில் ஸ்ரீ நம்மாழ்வார் அருளியதிருவாய்மொழியில் முதல் பத்து சேவிக்கப்பட்டது.
இரண்டாம் நாள் முதல் பத்தாம் நாள் வரை தினமும் 6.30 மணிக்கு பெருமாள் பரம பத வாசல் வழியே எழுந்தருளி உள்புறப்பாடு நடைபெறும். பின்னர் தாயார் மண்டபத்தில் ஆழ்வார்களுடனும் ஆச்சார்யர்களுடனும் பெருமாள் எழுந்தருளியிருக்க திருவாய் மொழி சேவிக்கப்படும். பத்தாம் நாள் (20.01.13) ஸ்ரீ நம்மாழ்வார் பெருமாளின் திருவடி தொழல் வைபவம் நடைபெறும். ஆன்மாவை மேம்படுத்தும் இவ்வைபவத்தினைச் சேவித்து உய்வோமாக.
The following are some of the photographs taken during the utsavam…
Write up and Photography : Sri Venkatraman Jaganathan