Kaisika Ekadasi at Srivilliputur

0
1,035 views

ஸ்ரீவில்லிபுத்தூரில், கைசிக ஏகாதசியையொட்டி ஸ்ரீஆண்டாளுக்கு 108 போர்வை சாத்தும் வைபவம் சனிக்கிழமை இரவு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை காலை வரை நடைபெற்றது.

குளிர்காலம் தொடங்குவதைக் குறிக்கும் வகையில் இந்த வைபவம் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் வரும் கைசிக ஏகாதசியன்று நடைபெறும்.

இதற்காக ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னார், பெரியபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. பின்னர் 108 போர்வை சாத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோயில் தக்கார் கே.ரவிச்சந்திரன், செயல் அலுவலர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News source and Photo: dinamani

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here