Kaisika Dwadasi was celebrated today (25th Nov 2012) at Srithooppul. Here is a write by Sri Satagopa Thatacharyar Swami along with photos taken during the occasion
ஸ்ரீவிளக்கொளிப்பெருமாளின் விஷயமாக மூன்றுபாசுரம் அமைந்துள்ளன…..
நம்மாழ்வார் திருவிருத்தத்தில் நானிலம்வாய்க்கொண்டு எனும் பாசுரத்தில் கண்ணன் தொழும் வெஃகாவுது அம்பூம் தேனிளம்சோலையப்பாலது என திருத்தண்காவை திருத்தண்காவை சேர்த்து ஓரே பாசுரத்தில் அனுபவித்தார்.
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரியதிருமொழியில் பொன்னமாமனியை என துடங்கி காணும் தண்காவிலே என திருவேங்கடத்தி்ல் ஸேவித்த எம்பெருமானை திருத்தண்காவில் ஸேவித்ததாக ஸாதித்தார்.ஆக திருவேங்கடத்துடன் இந்த திவ்யதேச்சத்துக்கு ஸாம்யம் ஸாதித்தபடி.
திருநெடுந்தாண்டகதத்தில் முளைக்கதிரை குறுங்குடியில் முகிலை என துடங்கி விளக்கொளியை மரதகத்தை திருத்தண்காவில் வெஃகாவில் திருமாலை பாடகேட்டு என பாசுரம் ரஸனீயமாக அமைந்தது, இங்கு நம்மாழ்வார் அனுபவித்தபடி இரு திவ்யதேசத்து எம்பெருமானையும் சேர்த்து அனுபவித்துள்ளார்..மேலும் கைசிகமாஹாத்ம்யத்தில் குறிப்பிடப்பட்ட திவ்யதேசம் திருக்குறுங்குடியாகும் அந்த திவ்யதேசத்தையும் இந்த பாசுரத்தில் சேர்த்து அனுபவித்தபடியால் திருத்தண்காவுக்கும் திருக்குறுங்குடிக்கும் ஸாதர்ம்யம்- ஸாஜாத்யம் உள்ளதுபோல் தோன்றியது.திருக்குறுங்குடியில் சென்று எம்பெருமானை ஸேவிக்கமுடியாத நமக்கு குறுங்குடிக்கு ஸாம்யமான திவ்யதேசத்தில் எம்பெருமானை ஸேவிக்கவும் கைசிகமாஹாத்ம்யம் விண்ணப்பம் செய்யவும் அவகாசம் கிடைத்தமையை எண்ணி ஸந்தோஷித்தேன்.
ஸ்ரீஸ்வாமி தேசிகனே இந்த ஸ்தலத்தவராவார் அவர் ஸ்ரீபட்டர் ஸ்தானத்தில் இந்த திவ்யதேசத்தில் கைசிகமாஹாத்ம்யம் விண்ண்ப்பம் செய்ய ப்ராப்தமானவர். அவருக்கு ப்ரதிநிதியாக இங்கு ஸ்ரீதேசிகஸம்ப்ரதாயதுரந்தரர்களா
न दैवं देशिकात्परम् न परं देशिकार्चनात्।
श्रीदेशिकप्रियः