Vazhuthur Andavan/Therazhundur Andavan Thirunakshatram, Therazhundur

0
1,738 views

On September 1, 2012, Vazhuthur Andavan/Therazhundur Andavan Thirunakshatram was celebrated in a grand manner at Sri Amaruviappan Thirukkoil, Therazhundur.

September 1, 2012 அன்று வழுத்தூராண்டவன் மற்றும் தேரழுந்தூராண்டவன் திருநக்ஷத்ரமான ஆவணிப்பூரட்டாதி ஸ்ரீமத் தேரழுந்துராண்டவன் அவதாரஸ்தலமான தேரழுந்தூர் திவ்யதேசத்தில் ஸ்ரீ ஆமருவியப்பன் ஸன்னிதியில் விசேஷ திருமஞ்சனம்/உபய வேத பாராயணங்களுடன் கொண்டாடப்பட்டது. ஸ்ரீமதாண்டவன் சமர்ப்பித்த திவ்ய பரிமள த்ரவ்யங்களுடன் எம்பெருமான், தாயாருடனும் கலியனுடனும் கலியனுரை குடிகொண்ட கருத்துடைய ஸ்ரீ ஸ்வாமி தேசிகனுடனும் திருமஞ்சனம் கண்டருளி ஸ்ரீமதாண்டவன்  சமர்ப்பித்த நூதன வஸ்த்ரங்கள் சாற்றுபடியாகி மந்தஸ்மிதராய தாயாரும் எம்பெருமானும் காட்சியளித்தது மனோஹரமான ஸேவை, வடுவூர் ஆச்ரம பாடசாலை ம்ற்றும் ஸ்ரீமுஷ்ணம் பாட சாலை வித்யார்த்திகளின் செவிக்கினிய வேதபாராயணத்தையும் எம்பெருமான் திருச்செவி சாற்றியருளினான்.

முன்னதாக கஜேந்த்ர புஷ்கர்ணி கரையிலுள்ள ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரமத்திலுள்ள கிணற்று ஜலத்தை வெள்ளிக்குடங்களில் பூரித்து பஞ்ச சாந்தி ஜபத்துடன் சன்னித்திக்கு எழுந்தருளப்பண்ணி யது . ஆச்ரம மேனேஜர் ஸ்ரீமான் ராம்சுந்தர் வந்திருந்தவர்களுக்கு விசேஷ ததீயாரதனைப் பண்ணிவைத்தார். ஸ்ரீமதிவேதவல்லி ரங்கராஜன் பெருமாள் திருமஞ்சனத்துக்கும் ஸ்ரீமதி கீதா தேசிகன் வித்யார்த்திகளின் சம்பாவனைக்கும் த்ரவயம் ஸமர்ப்பித்தனர்.

Courtesy: சித்ரகூடம் ரங்கநாதன்

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here