Dayasatakam – Slokas 9 to 11

0
1,277 views

9. SALUTATIONS TO THE LORD OF LIMITLESS MERCY AT THIRUMALAI

kamapyanavadhIM vande karuNaa varuNaalayam |
vRuShashaila taTasthaanaaM svayaM vyakti Mupaagatam || 9
கமப்ய நவதிம் வந்தே கருணா  வருணாலயம் |
வ்ருஷ ஷைல தடஸ்த்தாநாம் ஸ்வயம் வ்யக்தி மு பாகதம் || 9

(MEANING):

adiyEn prostrates before that Ocean of Mercy (KaruNA VaruNAlayam), which is self- manifested (Svayam Vyakthim upAgatham) and presents itself in its limitless form (anavadhim) to all of its BhakthAs near the foot hills of Vrusha sailam (Vrusha saila taDasTAnam svayam vyakthim upAgatham). This ocean of Mercy can not be measured by place, time or object. The waters of this limitless ocean are Bhagavath KaruNai.

கமபி அநவதிம் வந்தே கருணா வருணாலயம்
வ்ருஷ சைல தடஸ்தாநாம் ஸ்வயம் வ்யக்திம் உபாகதம்.

பொருள் – எல்லை இல்லாததும், திருமலையின் அருகில் உள்ளவர்களுக்கு தானாகவே தோற்றம் அளிப்பதும் ஆகிய கருணை என்ற கடலை வணங்குகிறேன்.

விளக்கம் – இதுவரை ஆசார்ய பரம்பரையில் கீழிருந்து மேலாகக் கூறி வந்து, முதல் குருவான ஸ்ரீநிவாஸனிடம் முடிக்கிறார்.

ஸ்ரீநிவாஸனின் தயை என்பது மிகவும் உயர்ந்ததாகும். அதனைக் கடல் என்று ஒப்பிடுவது சரியல்ல என்று கூறலாம். ஏன்? இலங்கைக்குச் செல்வதற்காகக் கடலிடம் சென்ற ஸ்ரீராமனை, அந்தக் கடலரசன் அவமானம் செய்தான். அப்படி உள்ளபோது அந்தக் கடலை உவமையாகக் கூறுவது எவ்விதம் சரியாகும்? இந்த ஐயத்தை நீக்கவே கருணைக்கடல் என்று கூறினார்.

அவதி என்றால் எல்லையும் கூடியது என்று பொருள். இங்கு அநவதி என்பதன் மூலம் எல்லையற்றது என்பதை உணர்த்தினார். திருமலை அப்பன் தானாகவே தோன்றியவன் என்பதை ஸ்வயம் வ்யக்த என்பதன் மூலம் கூறினார்.

தடஸ்த என்ற பதம் மூலம் உபனிஷத்துகளில் உள்ள ஒரு கருத்தைக் கூறுகிறார். தடஸ்தர் என்றால் குளத்தில் இறங்காமல், கரையிலேயே நின்று கைகளை நீட்டுபவர் என்பதாகும் . இதன் மூலம் உணர்த்தப்படுவது என்ன? யார் ஒருவர் பரப்ரஹமத்தை அறிந்து கொண்டு விட்டோம் என்று நினைக்கிறார்களோ அவர்களுக்குப் ப்ரஹ்மம் தெரிவது இல்லை; யார் ஒருவர் பரப்ரஹ்மத்தை அறிய இயலாது என்று நினைக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே பரப்ரஹ்மம் புலப்படும்.

ஆக “நாம் அறிவோம்” என்று இறங்கினால் ஸ்ரீநிவாஸன் தூரத்திலேயே நிற்பான். இறங்குவதற்கு அஞ்சி, கரையிலேயே நின்றால் தானாகவே அவன் வருவான்.

மேலும் இதன் மூலம் உணர்த்தப்படுவது – நாம் நமது முயற்சியால் அவனை அடைந்து விடலாம் என்று எண்ணுபவர்களுக்கு அவன் தென்படுவதில்லை. யார் ஒருவனைத் தனக்குப் ப்ரியமானவன் என்று ஸ்ரீநிவாஸன் நினைக்கிறானோ அவனுக்குத் தன்னையும், தனது கருணையையும் வழங்கி, தன்னையும் வெளிப்படுத்துவான். இதனையே தேசிகர் ஸ்வயம் என்ற பதம் மூலம் கூறுகிறார்.

10. SALUTATION TO THE MERCY OF THE LORD OF ANJANADHRI

akinjana nidhiM soothim apavarga trivargayo : |
anjanaadreeshvara dayaamabhiShTaumi niranjanaam  ||10

(MEANING):

AdiyEn’s salutations to the blemishless (niranjana) Dayaa of the Lord of AnjanAdhri, the treasure to those without any wealth (akimchana nidhi) and the growing field (soothi) for the crops of Moksham, Dharmam, arTam and Kaamam (Chathurvidha PurushArTams/ apavarga thrivargayO: ).

In this world, the poor derive a lot of benefits and sukham, when they become beneficiaries of some concealed treasure. For discovering the wealth hidden under the earth, one needs to apply coleriyum (anjanam) to the eyes. The Lord stands on Anjana hill (adhri)  and His KaruNai is like a treasure. Those who want to benefit from this treasure to gain sathgathy adopt the easy to practice Prapatthi anushtAnam and become beneficiaries of the chathurvitha PurushArTams. The KaruNai of AnjanAdhri Iswaran is blemishless and flows readily towards every devotee without making any distinction about their Jaathi, Kulam or gender. adiyEn salutes that Utthama guNam of KaruNai of the Lord of AnjanAdhri.

அகிஞ்சந நிதிம் ஸூதிம் அபவர்க்க த்ரிவர்க்கயோ:
அஞ்சனாத்ரி ஈஸ்வர: தயாம் அபிஷ்டௌமி நிரஞ்ஜநாம்.

பொருள் – எந்த விதமான கதியும், வேறு ஏதும் உபாயம் இல்லாமலும் உள்ளவர்கள் சரணம் அடைவதற்கு ஏற்ற நிதி போன்றதும்; மோக்ஷம் என்பதை வழங்குவதும்; அறம்-பொருள்-இன்பம் என்பவற்றை அளிப்பதும்; எந்த விதமான தோஷங்களும் அற்றதும் ஆகிய ஸ்ரீநிவாஸனுடைய தயை என்னும் தேவியைத் துதிக்கிறேன்.

விளக்கம் – ஹனுமானின் தாயான அஞ்சனா தேவி தனக்கு ஒரு பிள்ளை பிறக்க வேண்டும் என்று தவம் இருந்து மலை ஆதலால், அஞ்சனாத்ரி என்று வழங்கப்படும் திருவேங்கடமலையின் நாயகனாக ஸ்ரீநிவாஸன் உள்ளான். அவனுடைய தயை என்பதைப் பற்றி இந்தச் ச்லோகம் தொடங்கிக் கூற உள்ளார்.

இங்கு நிதி என்ற சொல்லானது வெகு ஆழத்தில் உள்ள புதையலைக் குறிக்கும். அதனை அடைய வேண்டும் என்றால், பல ஆட்கள் கொண்டு முயன்றால் மட்டுமே இயலும். இதனை ஏழைகள் செய்வது இயலாது . ஆனால் இந்தத் தயை என்னும் நிதி, எந்த முயற்சியும் இல்லாதவர்களுக்கும் நினைத்த மாத்திரத்தில் வேண்டியவற்றை அளிக்கவல்லதாகும். கிஞ்சித் என்றால் சிறிதளவு என்று பொருள். இந்தச் ச்லோகத்தில் அகிஞ்சன என்ற பதம் மூலம் அவனது தயையைப் பெற “இந்தச் சிறிதளவு” என்பது கூட அவசியமில்லை என்று கூறினார்.

ந்மது வாழ்வில் அடையப்படவேண்டிய குறிக்கோளாக (புருஷார்த்தம்) நான்கு கூறப்படுகின்றன. இவையாவன – தர்ம( அறம்) , அர்த்த(பொருள்) , காம(இன்பம்) மற்றும் மோக்ஷம் என்பதாகும். இங்கு இந்த வரிசை மாறி தேசிகர் முதலில் மோக்ஷத்தைக் கூறியது காண்க. இது ஏன்? தயை தேவிக்கு மிகவும் உயர்ந்த புருஷார்த்தம் என்னும் மோக்ஷத்தை அளிப்பதிலேயே அதிக விருப்பம் உள்ளது. ஆனால் சாதாரண மக்கள் இந்த உயர்ந்த பலனைத் தள்ளி, அழியக்கூடிய மற்ற மூன்று பலன்களையும் எதிர் பார்ப்பதால் அவற்றைப் பின்னே கூறினார். அழியக் கூடிய இந்த மூன்று பலன்களும் தயா தேவியால் நமது பிடிவாதம் காரணமாகவே அளிக்க படுகின்றது; அவளாகவே விரும்பி அல்ல. இதை உணர்த்தவே வரிசை மாற்றிக் கூறினார். இங்கு அஞ்சனம் என்ற பதம் குற்றம் என்பதையும் கூறும் என்றாலும், நிரஞ்சனாம் – குற்றமற்றவள் என்று முன்பின் விரோதமாக கூறுகிறார். இது ஏன்?

ஸ்ரீநிவாஸன் இயல்பாகவே தோஷம் அற்றவன். ஆக தயா தேவியும் குற்றம் அற்றவளாகவே இருத்தல் வேண்டும். ஆனால் நீதியைச் சரிவர நிலை நாட்ட வேண்டிய ஸ்ரீநிவாஸனை, அவனது தயை என்ற குணம், நம் போன்று குற்றம் செய்பவர்களையும் மன்னிக்கும்படி செய்து விடுகிறது. இதனால் நீதி சரிவர அமையவில்லை எனலாம் அல்லவா? ஆக ஸ்ரீநிவாஸனை திசை திருப்பிய குற்றம் தயா தேவிக்கு உள்ளது என்று ரஸோக்த்தியாகக் கூறுகிறார்.

[wpaudio url=”http://www.mediafire.com/file/cg348xo957n1359/05_Dayasathakam_9-11.mp3″ text=”Dayasatakam Upanyasam Audio-Slokams 9 to 11″ dl=”0″]

 

SLOKAM 11

anuchara shaktyaadi guNaam
agresara bodha virachitaalokaam ||
svaadheena vRuShagireeshaaM
svayaM prabhootaaM pramaaNayaami dayaam ||11

(MEANING):

adiyEn seeks as my foundation for my rakshaNam DayA DEvi (DayAM PramANayAmi). She has Her Lord under her influence (svaadheena Vrusha Gireesam). She is followed by the assembly of Bhagavaan’s five guNams: Balam, Iswaryam, sakthi, Veeryam and Tejas (anuchara Sakthi aadhi guNam). The sixth guNam, Jn~Anam, goes in front announcing the Kattiyam of “Jaya, Jaya” to Dayaa Devi. That Jn~Ana guNam in front of Dayaa Devi is like the hand torch to light the way (agrEsara BhOdha virachitha AalOkAm). She is the queen of the Lord of Thirumalai without parallel (Svayam PrabhUthAm).

COMMENTS):

When a queen travels on the streets of her Capitol at night, there are servants who carry lighted torches to illuminate the way. Her retinue follows behind. Her adoring Lord accompanies her. In this state, she has very few people equal to her. She shines supreme. Similarly the Dayaa Devi, the divine consort of the Lord is an unmatched queen in Her Vaibhavam. When She sets forth to protect a Jeevan in trouble, among Her six guNams, Jn~Anam goes in front of Her to illuminate Her path. The other five follow Her to help Her. Dayaa Devi with such parivAram has Her Lord under Her influence. There is no one superior to Her. Therefore, adiyEn leaves the burden of my protection to Her. This slOkam suggests that Bhagavaan’s Jn~Ana guNam comprehends the state of suffering of the Jeevan and uses the Sakthi, Balam and other guNams to protect the jeevan.

 

11. அநுசர சக்த்யாதி குணாம்
அக்ரேஸர போத விரசித ஆலோகாம்
ஸ்வாதீன வ்ருஷகிரீசாம்
ஸ்வயம் ப்ரபூதாம் ப்ரமாணயாமி தயாம்.

பொருள் – தயாதேவியின் பின்னே சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம் மற்றும் தேஜஸ் என்ற ஐந்து குணங்களும் வேலைக்காரர்கள் போன்று செல்கின்றன. அவளுக்கு முன்னே வழிக்காட்டியபடி ஞானம் என்ற குணம் செல்கிறது. இப்படிப்பட்ட தயாதேவி, தன்னிடம் வசப்பட்ட ஸ்ரீநிவாஸனை தன்னிடமே கொண்டவளாய் , அதனால் தானே மேன்மையுடையவளாய் உள்ளாள். இப்படிப்பட்ட தயாதேவியை நான் சரணமடைகிறேன்.

விளக்கம் – இங்கு தயாதேவியப் பற்றித் துதிக்கத் தொடங்கிய உடனேயே, தான் (தயாதேவி) எப்படிப்பட்டவள் என்று அவளே வெளிப்படுத்தியதைக் காண்க . ஒரு ச்லோகம் அவனைப் பற்றி முழுமை அடையும் முன்பே இவள் ஓடி வந்து தன்னை உணர்த்திக் கொண்டதற்கு இதுவே சான்றாகும்.

இங்கு இரண்டு கேள்விகள் எழலாம் – எல்லையற்ற குணங்கள் கொண்ட ஸ்ரீநிவாஸனை துதிக்காமல் அவனுடைய தயை என்ற குணத்தை மட்டும் துதித்தது சரியா? பகவான் என்ற சொல்லுக்கு ஏற்றம் தரும் ஆறு குணங்களும், தயை என்ற ஒரு குணத்திற்கே அடங்கின என்பது சரியா? இந்தக் கேள்விக்கான பதிலை அடுத்து வரும் ஒன்பது ச்லோகங்கள் மூலம் நிரூபிக்கிறார்.

ஸ்ரீநிவாஸனின் அடியார்கள் யாரேனும் துயரம் கொண்டால் அவர்கள் எழுப்பும் துயர ஒலி தயாதேவிக்குக் கேட்கிறது. இவள் பரபரப்பு அடைந்து , தனது அந்தக் குழந்தையை காக்க வேண்டும் என்று ஓடுகிறாள். இவள் ஸ்ரீநிவாஸனின் பட்டமஹிஷியாக உள்ள போதிலும், குழந்தைக்காக ஓடும் அவசரத்தில் பல்லக்கைத் தேடி அதில் செல்வதில்லை. ஆக இவள் ஓடும் போது, சக்தி போன்ற குணங்கள் இவளுக்கு பின்னேயே ஓடி வருகின்றன.

அந்தக் குழந்தை (துன்பத்தில் உள்ள அடியார்) எங்கு, எதற்காகக் குரல் கொடுத்தது என்று வெளிச்சம் இட்டு காண்பிப்பதற்காக, ஞானம் என்ற குணம் தயாதேவிக்கு வழிகாட்டியபடி முன்னே ஓடுகிறது.

அந்தக் குழந்தையை சென்று அடைந்த பின்னர் அவள் பின்னே ஓடி வந்த சக்தி முதலான குணங்கள், தயாதேவியின் விருப்பம் காரணமாக, அந்தக் குழந்தைக்கு உதவத் தொடங்குகின்றன.

ஸ்வாதீன என்ற பதம் காண்க. இதன் மூலம் தயாதேவிக்கு ஸ்ரீநிவாஸன் முழுமையாகக் கட்டுப்பட்டவன் என்று உணர்த்துகிறார். ஸ்ரீநிவாஸனிடம் தயாதேவி இல்லாமல் எதுவும் நிகழாது. ஸ்ரீநிவாஸனே இவளுக்கு வசப்பட்டுள்ளான் என்றால், இவளுக்கு எஜமானன் யார் என்ற கேள்வி ஏற்படும். அதற்கு விடையாக – ஸ்வயம் ப்ரபூதம் – இவளே இவளுக்கு எஜமானி என்றார்.

ப்ரமாணயாமி – என்று ஏன் கூறவேண்டும்? ப்ரமாணம் என்றால் சாட்சி என்று பொருள். தேசிகர் இந்த ச்லோகத்தை இயற்றும் வரையில் தயாதேவியின் பெருமை எத்தகையது என்பதை விளக்க வேறு நூல் ஆதாரங்களே இல்லை எனலாம் . தயாசதகம் என்ற இந்த நூலை மட்டுமே தயாதேவியின் பெருமைகள் விளக்கும்ஆதாரம் எனலாம். அதனால் அந்தப் பதத்தை இட்டார்.

Source:
English: Oppiliappan KOil Sri Varadachari SaThakOpan Swami
Tamil: Sridharan Swami of Srirangam

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here